மேற்கு வங்க மாநிலம் அசன் சோல் மாவட்டத்தில், பாஸ்சிம் பர்தமான் என்ற பகுதியில் உள்ளது குல்டி ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் சனியன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இத னால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த தீவிபத்து தொடர்பாக ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயங்கள் மற்றும் சேதத்தின் அளவு தொடர்பாக முழுமையான எந்த தகவலும் வெளியாகவில்லை.